108 ஆம்புலன்ஸ் சேவை அலங்காநல்லூர் பகுதியில் தடைபட்டுள்ளதா??

108 ஆம்புலன்ஸ் சேவை இலவசமாக பொது மக்கள் நலன் கருதி இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இச்சேவையினால் ஏராளமான நடுத்தர மக்கள் முதல் ஏழை மக்கள் வரை பயனடைந்து வருகின்றனர்.

ஆனால் கடந்த இரண்டு வாரமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் 108 சேவைக்கு அழைத்தால் முறையான தொடர்பு கிடைப்பதில்லை மற்றும் சேவையும் கிடைப்பதில்லை என்று அப்பகுதி பொதுமக்களும், சில 108 சேவை ஓட்டுனர்களும் வருத்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.  இதை சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!