வரவேற்புரையை வடக்கு தெரு சமூக நல அமைப்பின் துணைத் தலைவர் சகோ.ஃபர்ஹான் பின் அஷ்ரப் வழங்கினார்.
வட்டியில்லா கடன் திட்டத்தைப் பற்றிய அறிமுகவுரையை திட்டத்தின் ஓருங்கிணைப்பாளர் மஃக்ரூப் வழங்கினார். 
நிகழ்ச்சியின் முன்னுரையை அறக்கட்டளையின் செயலாளர் முஜம்மில் திட்டம் கடந்து வந்த பாதையை சுருக்கமாக விளக்கினார். துவக்கவுரையை நாசாவின் உறுப்பினர் இஜாஸ் முகம்மது வழங்கினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நன்மையின் பக்கம் முன்னேறுவோம் என்ற தலைப்பில் மதரசா மாணவர்கள் வட்டி குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

பெண்களுக்கான சிறப்பு பேச்சாளர் தாஜ்நிஷா பேகம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், திருக்குர்ஆனில், பெண்களின் கடமைகளும் பொறுப்புகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளர் முன்னாள் ஆசிரியர் சமரசம் பத்திரிக்கை, மாநில தலைவர் Welfare Party of India S.N.சிக்கந்தர், நபி(ஸல்) ஏற்படுத்திய முன்மாதிரி பொருளாதரம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக நன்றியுரையை நாசா அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் மஃக்ருப் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிற்ப்பித்தனர்.



அல்ஹம்துலில்லாஹ்
எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே