போலியோ சொட்டு மருந்து முகாம்…

நாடு முழுவதும் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதி தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கும் மையம் செயல்படும். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இம்முகாம்களில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

One thought on “போலியோ சொட்டு மருந்து முகாம்…

  1. நேற்றைய தினம் உயர் மின் அழுத்தத்தினால் சில பகுதிகளில் டிவி, பிரிட்ஜ், மொபைல் சார்ஜர் மற்றும் டியூப் லைட்கள் பழுதடைந்துள்ளது.

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!