அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு, கீழக்கரையில் வெடி வெடித்து கொண்டாட்டம்…


அஇஅதிமுக கழக பொதுச் செயலாளராக இன்று சென்னை வானரகத்தில் நடந்த பொதுக்குழுவில் ஒரு மனதாக V.K சசிகலா  தேர்ந்தெடுக்கப்பட்டதை ஓட்டி இன்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அஇஅதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதில் நகர் அம்மா பேரவை செயலாளர் சரவண பாலாஜி, எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் இம்பாலா சுல்த்தான், சிவா, மாணவரணி செயலாளர் சுரேஷ், நகர் துணை செயலாளர் குமரன் மற்றும் இராமநாதபுர மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் டாக்டர் ஹாஜா முகைதின் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!